18-11-2025

ஆவியின் கனி என்றால் என்ன? 

ஆவியின் கனி என்பது அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 5:22–23-ல் சொல்லிய ஒன்பது நற்குணங்களின் பட்டியலாகும். மனிதனிடத்தில் காணப்படக்கூடிய கோபம், சண்டை, பொறாமை போன்ற  மோசமான மற்றும் பயங்கரமான தோற்றத்தை வெளிப்படுத்தும்  பாவ செய்கைகளின் ("மாம்சத்தின் கிரியைகள்") ஒரு நீண்ட பட்டியலுக்கு எதிராக பதிலளிக்கும் விதமாக  இதனை எழுதுகிறார் (கலா. 5:19–21). மாம்சத்தின் கிரியைகளுக்கு நேர்மாறாக, "ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்."
13-11-2025

சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்

தனது ஜெபவாழ்வில் முழுமையாய் திருப்தியடைந்த ஒரு கிறிஸ்தவனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்: நீங்கள் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் உங்களுடைய வார்த்தைகள் உங்களின் மேற்கூறையை அடைவதற்கு முன்பாகவே சிதறி போவதை போல உணர்கிறீர்கள், தேவன் எனது வார்த்தைகளை கேட்கிறாரா அல்லது நான் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று நீங்கள் யோசிக்க தொடங்குகிறீர்கள்.
11-11-2025

மகிமையை நாடுதல்

உலக மகிமையை நாடுவது (Quest for Glory) நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.  உலக மகிமையானது  நம்முடைய கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாகத் தோன்றும்போது, அதற்காக நாம் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படுவோம், அல்லது எவ்வளவு தூரம் ஓடுவோம்!
06-11-2025

பரிசுத்த தேவனுடனான போரும் சமாதானமும்

1945 ம் ஆண்டு கொளுத்தும் வெயிலில் சிகாகோ தெருக்களில் ஸ்டிக்பால் என்ற விளையாட்டை மிக மும்முரமாக நான் விளையாடிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது.
04-11-2025

கிறிஸ்துமஸ் கதையின் நீண்ட தொடர்ப்பயணம்

இயேசுவின் பிறப்பைக் குறித்து சிந்திக்க சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி பார்ப்பது மட்டுமல்ல, நம்முடைய முதல் பெற்றோரான ஆதாம் மற்றும் ஏவாள் இருந்த காலத்திற்கே முழுவதுமாகப் பின்னோக்கிச் நாம் செல்ல வேண்டும்.
30-10-2025

அன்பின் பிணைப்பு

நமது பாவங்கள் மூலமாக முதலில் நாம் கிறிஸ்துவை காயப்படுத்தாமல் இகழாமல், அவமானப்படுத்தாமல், நமது சகோதரரில் யாரும் நம்மால் காயப்படுத்தப்படவோ, வெறுக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, அவதிக்கப்படவோ அல்லது எந்த வகையிலும் புண்படுத்தப்படவோ முடியாது; கிறிஸ்துவுடன் ஒருமித்து நடவாமல் நம் சகோதரரோடு ஒருமித்து நடக்கமுடியாது; நமது சகோதரரை நேசியாமல் கிறிஸ்துவை நேசிக்க முடியாது; நமது சொந்த சரீரத்தை நாம் கவனித்துக் கொள்வது போலவே நம்முடைய சகோதரர்களின் சரீரங்களையும் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் அவர்கள் நம் சரீரத்தின் அவயவங்கள்; நமது சரீரத்தில் ஓரிடத்தில் ஏற்படும் வலியானது மற்ற எல்லா இடங்களிலும் உணர்வை ஏற்படுத்துவது போல, நமது சகோதரரில் ஒருவர் எந்தவொரு தீமையினால் பாதிக்கப்படும்போது நமது இரக்கத்தினால் அவர்கள் தொடப்பட்டிருக்கவேண்டும்.
28-10-2025

பிளவுபட்ட நமது இருதயத்திற்கான மருந்து 

ஒரு வயதான பெற்றோர் அல்லது நண்பர் இறக்கும்போது, ​​அவர்கள் நன்றாக இந்த உலகத்தைவிட்டு விடைபெற்று சென்றனரா என்ற கேள்வியை  அக்குடும்பத்தினரிடம் நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இறக்கும் தருவாயில் அவர்கள் பேசின கடைசி வார்த்தைகள் மிகவும் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன; அது இறுதி விடைபெறுதலாக மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைக்க வேண்டிய ஞானமுள்ள மற்றும்  அன்புக்குரிய வார்த்தைகளாக எண்ணப்படுகிறது.
23-10-2025

தேவனின் சுய வெளிப்பாடு

சோதோம் கொமோராவின் அழிவுக்கு முன்பு தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே நடந்த சந்திப்பைப் பற்றி நான் சமீபத்தில் யோசித்துக் கொண்டிருந்தபோது ஆச்சர்யமூட்டும் ஓர் உணர்வு ஏற்பட்டது.
21-10-2025

ஆத்தும இளைப்பாறுதல்

கிறிஸ்துவின் மிகவும் விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் ஒன்று, அவர் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலை அளிப்பவர் என்பதுவே. பிரசித்திபெற்ற திருச்சபை பிதாவான அகஸ்டின், "தேவனே, நீர் எங்களை உமக்காகவே உண்டாக்கினீர், எங்கள் இருதயங்கள் உம்மில் இளைப்பாறுதல் அடையும்வரை அதற்கு இளைப்பாறுதல் இல்லை" என்று தமது விசுவாச கோட்பாடு (The Confessions) என்ற நூலில் எழுதியிருக்கிறார். இந்த இளைப்பாறுதலின் தேவையைப் பற்றியே இயேசு இவ்விதமாக குறிப்பிடுகிறார்: