லிகோனியரின் வலைப்பதிவு

திறமையான போதகர்கள் மற்றும் வேதாகம  ஆசிரியர்களின் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள், வளர்ந்து வரும் கிறிஸ்தவர்களை தங்கள் நம்பிக்கையில் ஊக்குவிக்கும் வகையில் வேத, இறையியல் மற்றும் நடைமுறைக் கருப்பொருள்களைக் குறிப்பிடுகின்றன.


 
14-10-2025

அடங்காத பிள்ளையை நான் எப்படி கையாள்வது?

இளம் வயதினர் அல்லது  வளர்ந்த வாலிபர்களுடனான உறவுகளில் பிளவு ஏற்படுவதினால் நம் வாழ்வில் உண்டாகும் அனுபவம் வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய  தாக்கத்தை ஏற்படுத்துகிறதாயிருக்கிறது.  நமது மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வுகளும் கூட பல்ச இழப்புகளை  நினைவுபடுத்துகிறவையாக அமைந்து விடுகின்றன. இது பெற்றோர்களின் இதயத்தை உடைத்து, குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
09-10-2025

மன்னிப்பைப் பற்றி நமது பிள்ளைகளுக்கு கற்பித்தல்

பெற்றோர்கள் உவமைகளாக உள்ளனர். நமது வாழ்க்கையின் கதைகள் நமது குழந்தைகளுக்கு அநேக பாடங்களை கற்றுத் தருகிறது. நமது வாழ்வு கற்பிக்கின்ற நாம் நம்புகின்ற மாபெரும் சுவிசேஷ கதை என்னவென்றால் அது மன்னிப்பைப் பற்றியது. தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் மன்னிக்கிறார், மற்றும் தேவனுடைய மன்னிப்பின் உயிருள்ள சாட்சி நம்மில் உள்ள மன்னிக்கும் இருதயம், அது வெறுமனே மன்னிப்பைப் பெறுவது மாத்திரமல்ல அதைக் கொடுக்கவும் செய்யும். நாம் நமது பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தில் மன்னிப்பைப் பற்றி கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும், ஆனாலும் நமது வாழ்வின் மூலம் அவர்களுக்கு நாம் மன்னிப்பின் உவமைகளாக மாறவேண்டும். 
07-10-2025

உங்கள் சபையிலுள்ள பராமரிப்பாளர்களுக்கு உதவி செய்வது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பு, சில வாலிபர்கள் கூட்டமாக  உற்சாகத்துடன், வலிமைமிக்கவர்களாக  எங்கள் திருச்சபைக்கு வந்தனர். எங்களுடைய "ஊழியங்கள்" தேவையுள்ளவர்களுக்கு எப்படி ஊழியத்தில் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது  என்பதை பற்றிய அதிகாரப்பூர்வமான வரைமுறைகள்  செய்யப்படாததால், அந்த வாலிபர்கள் அதை செய்ய  அறியாதிருந்தனர்.
02-10-2025

எனது வேலை ஸ்தலத்தில் நான் எவ்வாறு கிறிஸ்தவனாக இருப்பது?

என்னுடைய இளம் வயதில் ஒரு முறை ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ தொழிலதிபர் என்னிடம் இவ்வாறு கூறினார்: “உங்களுக்கு ஒன்று தெரியுமா அலெக்ஸ், வருமான ஆதாயத்தைத் தவிர மற்றபடி நான் வேலைக்காக செய்வது முற்றிலும் அர்த்தமற்றது.” இவர் ஒரு தாழ்மையான மனிதன், வேலையைப் பற்றி இவரது கண்ணோட்டம் என்னவென்றால், வேலை ஒரு அவசியமான தீமை என்பதே.
30-09-2025

கிறிஸ்தவர்கள் மீது தேவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாரா?

இக்கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க, நாம் கிரியைக்கு முன்பாக கிருபையை  முன்னிறுத்தி உறுதியான அஸ்திபாரத்தை அமைக்க வேண்டும்.
25-09-2025

மனநிறைவில் நிலைத்திருப்பதற்கான ஐந்து வழிமுறைகள்

கடைசியாக நீங்கள் எப்போது உங்களை கண்ணாடியில் பார்த்து நீங்கள் பார்த்த ஒன்றை மாற்ற விரும்பினீர்கள்? கடந்த ஒரு மாதத்தில் “எனக்கு அது வேண்டும்?” என்று எதை சொன்னீர்கள்? நீங்கள் பெற விரும்பிய பதவி உயர்வையும், பொருளையும் அல்லது பாராட்டையும் உங்களது நண்பர் பெற்ற போது உங்களது மனநிலை எப்படி இருந்தது?
23-09-2025

அன்பான ஒருவரை இழக்கும்போது ஏற்படும் துயரம் 

நமக்கு அன்பான ஒருவரை இழக்கும் போது ஏற்படும் பாதிப்பை தவிர வேறு எதுவும் மிக அதிகமாக நம்மை  காயப்படுத்துவதில்லை. நாம் நேசிப்பவர்களை விட்டு பிரிந்து வாழும்படியாய்  நாம் தேவனால் படைக்கப்படவில்லை. பாவத்தின் விளைவினால் மரணம் ஏற்பட்டது நம்முடைய படைப்பின் நியதியில் நாம் அவ்வாறாக படைக்கப்படவில்லை  (ரோமர் 5:12).
18-09-2025

துன்பங்கள் மற்றும் சோதனைகள் வழியாக பிள்ளைகளை மேய்த்தல்

நமது பிள்ளைகள் சோதனைகளால் துன்பப்படுவதைப் பார்ப்பதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். தங்கள் சொந்த பிரச்சனைகளை சமாளிக்க தயராக இருக்கும் பெற்றோர்கள் கூட அநேக நேரங்களில் தங்களது பிள்ளைகளின் துன்பங்களில் தங்களை உதவியற்றவர்களாக உணருகிறார்கள்.
16-09-2025

கிறிஸ்தவர்கள் மரணநிகழ்வில் துக்கமடைவது சரியா? 

இது வழக்கத்திற்கு மாறாக வாழ்க்கையின் சூழ்நிலைகள் செல்லும் போது நடக்கும் வழக்கமான ஒன்றாகும்: துயரம் நமது இனிமையான வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நுழைந்து, சீர்குலைக்கிறது. துக்ககரமான அனுபவங்கள் அழைக்கப்படாத விருந்தாளியாக அதனுடைய தாக்கத்தை நம் வாழ்வில் செயல்படுத்துகிறது.