How Are We to "Improve Our Baptism"?

நமது ஞானஸ்நானத்தை  நாம் எவ்வாறு “மேம்படுத்துவது”? 

16-07-2026
How Are We to "Improve Our Baptism"?

நமது ஞானஸ்நானத்தை  நாம் எவ்வாறு “மேம்படுத்துவது”? 

16-07-2026

இயேசு நமது முன்மாதிரியா?

Is Jesus Our Example?

கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
(1 பேதுரு 2:21).

இயேசு நமது முன்மாதிரியா? ஒரு விதத்தில் இந்த கேள்விக்கான பதில் எளிமையான ஒன்றுதான். ஆம். இயேசு நமது முன்மாதிரிதான், ஆனால் நமது முன்மாதிரி மாத்திரமல்ல, அவரைப் பின்பற்றி நடப்பதும் நம் விசுவாசத்திற்கான அடித்தளம் அல்ல.

கிறிஸ்துவின் தனித்துவமான மீட்பின் பணி

இயேசு நமக்கு “ஒரு மாதிரியை விட்டுச் சென்றார், அதனால் நாம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றலாம்” என்று எழுதுவதற்கு முன்பு, பேதுரு முதலில் “கிறிஸ்து உங்களுக்காகப் பாடுபட்டார் ” என்று கூறுகிறார். அதாவது, நாம் மற்றவர்களுக்காகப் பாடுபடாத ஒரு வழியில் அவர் பாடுபட்டார். கிறிஸ்து சிலுவையில் பாடுபட்ட போது, “அவரது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார்”; அவரது தழும்புகளால் நாம் குணமாகிறோம் (1 பேதுரு 2:24). சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
(1 பேதுரு 2:25).

தம்முடைய வாழ்விலும், மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும், விசுவாசத்தினால் அவரோடு இணைந்திருக்கும் நமக்காக, நம்மால் நமக்காகவோ அல்லது மற்றவருக்காகவோ செய்ய முடியாததை இயேசு செய்திருக்கிறார். உடனிருக்கும் பாவிகளை அவர்களுடைய பாவத்தின் நித்திய விளைவுகளிலிருந்து மீட்க நம்மால் மரிக்க முடியாது. ஆனால் இயேசுவோ, தேவனாகவும் பரிபூரண மனிதராகவும், சிலுவையில் பாவிகளுக்காகத் தம்மையே பலியிட்டுக்கொண்டார். தம்மை விசுவாசிக்கிற நமக்காகக் கிறிஸ்து பாடுபட்டார்.

நான்கு சுவிசேஷங்களின் முடிவில், நம்மால் நமக்காகச் செய்ய முடியாததை இயேசு நமக்காகச் செய்கிறார். நற்செய்திகளின் முதல் மற்றும் முக்கிய நோக்கம், இயேசு செய்வதைப் பின்பற்றுவது அல்ல, மாறாக, யோவான் மிகத் தெளிவாக எழுதுவது போல, இயேசுவை விசுவாசிப்பதே ஆகும்: “இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், அந்த விசுவாசத்தினாலே அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனைப் பெறும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன” ( யோவான் 20:31 ).

கிறிஸ்துவின் சீஷர்களாக அவரைப் பின்பற்றுதல்

ஓ, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயல்வதற்கு நற்செய்திகள் எவ்வளவு செழுமையானவைகளாக உள்ளன. அவருடைய சாதனையின் சாராம்சம் ஈடு இணையற்றது, ஆயினும் அவருடைய மனித வாழ்க்கை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் வியக்கத்தக்க வகையில் பின்பற்றத்தக்க தன்மையால் நிரம்பி வழிகின்றன. நம்மைப் போலவே, அவரும் உண்மையாகவே மனிதர்தான்; பாவிகளின் எதிர்ப்பையும் வீழ்ச்சியடைந்த இந்த உலகின் போக்கையும் எதிர்த்து, மனித மாம்சத்திலும் இரத்தத்திலும் வாழ்ந்து, தம் பிதாவை மகிமைப்படுத்துகிறார். இயேசு, நமக்கான தனித்துவமான பாவநிவாரணமாகவும் (நம் பாவங்களுக்கான பரிகாரமாகவும்) மற்றும் கிறிஸ்தவ வாழ்வின் உலகளாவிய முன்மாதிரியாகவும் இருக்கிறார்.

இயேசு தாமே தம்மைப் பின்பற்றுபவர்களைத் தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளவும் , தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் அழைத்தார். மத்தேயு 11:29- ல் அவர் , “என் [எளிதான மற்றும் இலகுவான] நுகத்தை உங்கள் மீது எடுத்துக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். உண்மையில், இயேசுவின் “சீஷராக” இருப்பதன் அர்த்தம் இதுதான். சீஷர் என்றால் கற்றுக்கொள்கிறவர் என்று பொருள் . அவருடைய சீஷர்கள் என்பவர்கள், அவருடைய வாழ்க்கை மற்றும் போதனைகளிலிருந்து கற்றுக்கொண்டு, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களே. எனவே, இயேசு தாம் மரிப்பதற்கு முந்தைய இரவில் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவியபோது, அவர் கூறினார்: “உங்கள் ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேனானால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்கு நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் கொடுத்திருக்கிறேன்” ( யோவான் 13:14-15 ).

நமக்காகவும் அல்லது யாரோ ஒருவருக்காகவும் நாம் செய்ய முடியாத ஒன்றை, அவரது வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில், விசுவாசத்தினால் அவரோடு கூட இணைக்கப்பட்டவர்களுக்கு இயேசு செய்து முடித்தார்.

கிறிஸ்துவின் வாழ்விலும் மரணத்திலும் வெளிப்பட்ட மீட்பின் தகுதியை நம்மால் மீண்டும் உருவாக்க முடியாது என்றாலும், அவர் தம் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டிருந்தபோதும் சரி, சிலுவையில் அறையப்பட்ட தன் உடலோடும் சரி, வெளிப்படுத்திய அந்தத் தாழ்மையையும் தியாகத்தையும் கொண்ட அன்பை நம்மால் நிச்சயமாகப் பின்பற்றுவோம்.

இயேசுவை நமது முன்மாதிரியாகக் கொள்ளும்படி அப்போஸ்தலர்களும் நம்மை அறிவுறுத்துகிறார்கள். பவுல், “கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்த சிந்தையே உங்களுக்குள்ளும் இருக்கக்கடவது…” என்று கூறி, சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலின் சுய-தாழ்மையின் முன்மாதிரியையும் மகிமையையும் விவரிக்கிறார் ( பிலிப்பியர் 2:5-8 ). அவ்வாறே, யோவான் தனது முதல் கடிதத்தில், “[இயேசுவுக்குள்] நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.” ( 1 யோவான் 2:6 )” என்று எழுதுகிறார்.

கிறிஸ்துவின் ஆவியானவர் வாசமாயிருப்பதின் வல்லமை

அப்படியானால், கிறிஸ்தவர்களாகிய நாம் “தெய்வீக வாழ்க்கை” வாழ்வது என்பதன் அர்த்தம் என்ன? பவுல் அதை 1 தீமோத்தேயு 3:16- ல் மிகவும் நினைவில் நிற்கும் வகையில் விவரிக்கிறார் , அங்கு அவர், “தேவ இரகசியம் மெய்யாகவே பெரியது என்று நாம் அறிக்கையிடுகிறோம்” என்று எழுதுகிறார். ஆம், தெய்வீகம். இதில் என்னென்ன அடங்கும்? நற்பண்புகள் அல்லது நீதியான செயல்களின் ஒரு சுருக்கமான பட்டியலை நாம் எதிர்பார்க்கலாம். அதற்குப் பதிலாக, தெய்வீக கிறிஸ்தவ வாழ்க்கைக்கு, கடவுள்-மனிதனின் முன்மாதிரியின் முக்கியத்துவத்தை பவுல் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இயேசுவைப் பற்றிய ஒரு மேன்மையை நாம் இங்கு பெறுகிறோம்:

அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேயு 3:16).

தேவபக்தி என்றால் என்னவென்று அறிய விரும்புகிறீர்களா ? இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட “தேவபக்தி”. எனவே, கிறிஸ்தவர்கள் தேவபக்தியுள்ள உணர்வுகளையும் செயல்களையும் “கிறிஸ்துவைப் போன்ற தன்மை” என்று அடிக்கடி அழைப்பதுண்டு. நமது விசுவாசத்தின் மையத்தில் அவருடைய ஈடு இணையற்ற மீட்பின் பணி உள்ளது, மேலும் கிறிஸ்தவ வாழ்வின் உன்னதமான எடுத்துக்காட்டு, அற்புதமாகப் பின்பற்றத்தக்க அவருடைய மனித வாழ்க்கையாகும்.

நாம் நற்செய்திகளை வாசித்து, அவருடைய செயல்களைக் கண்டு வியக்கிறோம். பாவிகளுக்காக அவர் செய்த ஈடு இணையற்ற சாதனைகளைக் கண்டு நாம் பிரமித்து நிற்கிறோம்; மேலும், அவர் உரையாடுவதையும், ஜெபிப்பதையும், பிரசங்கம் செய்வதையும், இரக்கம் காட்டுவதையும், இளைப்பாறுவதற்காகத் தனியாகச் சென்று, மீண்டும் அருளைப் பணிவிடை செய்யத் திரும்புவதையும் நாம் காண்கிறோம். அவருடைய அன்பையும், பொறுமையையும், ஞானத்தையும் நாம் கவனிக்கிறோம்; மேலும், நமக்குள்ளே வாசம் செய்யும் அவருடைய ஆவியின் வல்லமையால், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயலுகிறோம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டேவிட் மாத்திஸ்

டேவிட் மாத்திஸ்

ரெவரெண்ட் டேவிட் மாத்திஸ், மின்னிசோட்டாவின் மின்னியாபோலிஸ்/செயின்ட் பால் நகரில் உள்ள சிட்டிஸ் சர்ச்சின் மூத்த போதகராகவும், desiringGod.org வலைதளத்தின் நிர்வாக ஆசிரியராகவும் உள்ளார். இவர் ' Habits of Grace: Enjoying Jesus through the Spiritual Disciplines' என்ற நூலின் ஆசிரியர் ஆவார் .