
தானியேலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 பிரதான காரிங்கள்
01-05-2025
யாக்கோபு நிருபத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 பிரதான காரியங்கள்- Dr.கிரிகோரி ஆர். லேனியர்
08-05-2025எரேமியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

மாத்யூ எச் பேட்டன்
வேதாகமத்தில் மிகவும் அச்சுறுத்தும் புத்தகங்களில் எரேமியாவும் ஒன்று. முழு வேதத்திலும் வார்த்தைகளின் எண்ணிக்கையில் பார்த்தால் எரேமியாதான் மிக நீண்ட புத்தகமாகும். இப்புத்தகம் கால வரிசையின் படி அல்லாமல் அநேக எச்சரிப்புகளோடு கவிதை நடையிலிருந்து வரலாற்றுப் பகுதிகளுக்கு நகருகிறது. இப்புத்தகத்தின் பெரும்பான்மையான உள்ளடக்கம் மிக மோசமான பாவத்தைக் குறித்தும், மிக கடுமையான நியாயத்தீர்ப்பைப் பற்றியும் உள்ளது, நம்பிக்கைக்கான சில துளிகளை மட்டுமே இங்கு காணமுடியும். இதை வாசிக்க முயலும் நபர்கள் பெரும்பாலும் குழப்பமடைகின்றனர்.
ஆனால், தேவன் இப்புத்தகத்தை நமது ஆறுதலுக்கென்றே கொடுத்துள்ளார் (ரோமர் 15:4). இதைப் பற்றிய மூன்று காரியங்களை நாம் மனதில் கொள்வோமென்றால், இப்புத்தகத்தை தேவன் கொடுத்ததில் அவரின் ஞானத்தையும் அன்பையும் நாம் கண்டுக்கொள்ள ஆரம்பிப்போம்.
1.நியாயத்தீர்ப்பிலிருந்து மீட்பு என்பதுதான் இதன் கருப்பொருள்.
இதன் அனைத்து சிக்கலான தன்மைக்கும், எரேமியாவின் முழு புத்தகமும் இரு அடிப்படையான கருப்பொருள்களை விளக்குகிறது: நியாயத்தீர்ப்பு மற்றும் மீட்பு. இதன் கருப்பொருள் வசனம் இதை எடுத்துக்காட்டுகிறது: “பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.”
எரேமியா 1:10. முதல் நான்கு வினைச்சொற்கள் (பிடுங்கும், கடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கும்) நியாயத்தீர்ப்பைப் பற்றியவை. அடுத்த இரண்டு சொற்கள் (கட்டவும், நாட்டவும்) மீட்பைப் பற்றியவை.
பிரதானமாக, நியாயத்தீர்ப்பு நிறைந்த தீர்க்கதரிசன புத்தகங்கள் கிமு 586 ல் பாபிலோனிடம் இஸ்ரவேல் வீழ்ச்சியடைந்ததை குறிப்பிடுகின்றன. இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பு மூலமாக, யூதாவின் மோசமான பாவத்தின் விளைவுதான் இவைகள் என்பதை தேவன் காண்பிக்கிறார். உபாகமம் 28 ல் கூறப்பட்ட உடன்படிக்கையின் சாபங்கள், தம்முடையில் மக்கள் தனக்கு துரோகம் செய்யும்போது தாம் என்ன செய்வேன் என்று சொன்னாரோ அதை அப்படியே நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுகின்றன. மெய்யாகவே, தேவன் அதிக பொறுமையோடு இருந்துள்ளார்.
எரேமியாவின் ஊழியத்தின் போது, யூதாவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத நிகழ்வாக இருந்தது. அவர்கள் எவ்வளவு மனந்திரும்பினாலும், ஜெபித்தாலும் அந்த நியாயத்தீர்ப்பை தடுக்கமுடியவில்லை. எனவேதான் எரேமியா தம் மக்களுக்காக ஜெபிக்க கூடாது என்று தேவன் தடைவிதிக்கிறார் (எரே 7:16, 11:14). எனவே மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரேவழி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து நாடுகடத்தப்படுவதாகும் (எரே 21:8-10).
ஆனால், இப்புத்தகத்தின் மேன்மையான சத்தியம் என்னவென்றால், எந்த தேவன் இந்த மக்கள் மீது பயங்கரமான நியாயத்தீர்ப்பை கொண்டுவந்தாரோ, அதே தேவன் அந்த மக்கள் மீதான சாபத்தை மாற்றவும் அவர்களை குணப்படுத்தவும் விரும்புகிறார் என்பதுதான் (எரே 31:28, 30:12-17, உபா 32:39). யூதாவின் அடிமைத்தனத்திற்கு முன்பு இருந்த நிலைமையை காட்டிலும் மேலான ஒன்றைத் தேவன் செய்வார்: அதுதான் புதிய உடன்படிக்கை. இங்கு மக்களின் அடிமைத்தனத்திற்கு காரணமான அவர்களின் பாவத்திற்கான தீர்வை தேவன் அருளுவார். கர்த்தர் தம்முடைய மக்களின் இருதயத்தில் தமது கட்டளைகளை எழுதுவார் (எரே 31:31-34). மேலும் அவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படிச் செய்வார் (எரே 32:40). பாவம் இனி அவர்களை ஆளுகைச் செய்யாது.
எனவே, யூதாவின் வாழ்க்கையில் இவ்விதமான மோசமான நிலைமையை கடக்க உதவுவதற்காகவே தேவன் எரேமியாவின் புத்தகத்தை கொடுத்திருக்கிறார். யூதாவின் தேசம் ஒவ்வொரு காலத்திலும் (ராஜா, தேவாலயம், தேசம், உடன்படிக்கை) வேரோடு பிடுங்கப்பட்டபோதும், தேவனுக்கு ஒரு மீட்பின் திட்டம் இருந்தது என்பதை எரேமியா காட்டுகிறது. ஒருபோதும் அழியாத, கடைசி காலங்களில் அளிக்கப்படும் ஆசீர்வாதங்களுக்காக தற்காலிக நிழல் ஆசீர்வாதங்களை அவர் அகற்றினார். இஸ்ரவேலின் இறுதியான முடிவு தேவ கோபமாக இருக்காது மாறாக அவைகள் கிருபையும் மகிமையுமாக இருக்கும்.
2. சிலநேரங்களில் இப்புத்தகத்தில், பேச்சாளர்கள் எவ்வித அறிமுகமுமின்றி மாற்றங்களை குறிப்பிடுவதற்கு மாறுவார்கள்.
எரேமியாவின் கவிதைநடை பகுதிகளைப் புரிந்துக்கொள்வதில் மக்கள் பெரும்பாலும் சிரமப்படுகிறார்கள். ஆனால் இப்புத்தகம், எரேமியாவுக்கும் தேவனுக்கும் மக்களுக்கும் இடையேயான உரையாடல்களை சித்தரிக்கிறார் என்று அறியும்பொழுது
நமக்கு இப்பகுதிகள் எளிமையான புரிந்துக்கொள்ளக்கூடிய பகுதிகளாக அமைகின்றன. சில சமயங்களில் எரேமியா, மக்களை “சீயோன் குமாரத்தி” என்று அழகாக சித்தரிக்கிறார், இங்கு எருசலேம் ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறது.
சில நேரங்களில், இந்த உரையாடல்களில் இதில் உள்ள பேச்சாளார் அறிமுகமேயன்றி மாற்றங்களை குறிப்பிடுவதற்கு மாறுகிறார். உதாரணமாக, எரேமியா 8:18-9:3 ல் பேசுகிறவர் ஐந்து முறை மாறுகிறார். எனவே, இவ்வித பகுதிகளில் பேசுபவரின் குரலின் மாற்றத்தை கண்டறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். “இதை இங்கு யார் பேசுகிறார்கள்?” என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு, இதில் பேச்சாளர் அடிக்கடி மாறுவார்கள் என்று நினைவுக்கொள்ளும்போது கடினமான வசனங்களைப் புரிந்துக் கொள்ளலாம். இதற்கான விளக்கவுரைகளும் நமக்கு உதவும்.
3. இப்புத்தகம் இயேசு கிறிஸ்துவையும் திருச்சபையும் சுட்டிக்காட்டுகிறது.
இப்புத்தகத்தின் பிரதான ஆசிரியரான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (1 பேதுரு 1:11) இப்புத்தகம் தம்மைப்பற்றியது என்பதை கூறுகிறார் (லூக்கா 24:25-27). மற்றும் இப்புத்தகம் கிறிஸ்துவைப் பற்றியதென்றால் நிச்சயமாக அவரோடு இணைந்திருக்கும் அவரது சபையைப் பற்றியும் பேசும்.
நாம் எரேமியா புத்தகத்தை வாசிக்கையில், ஜீவனையருளும் இயேசுவோடு உள்ள சந்திப்பை நாம் எதிர்பார்க்க வேண்டும். நம்மைப்பற்றி பேசும் ஜீவனுள்ள வார்த்தைகளையும் நாம் எதிர்ப்பார்க்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுவே தாவீதின் வம்சத்தில் வருகின்ற நீதியுள்ள கிளை. “கர்த்தர் நமது நீதி.” (எரே 23:5-6). திருச்சபையும் இதே பெயரோடு அழைக்கப்படுகிறது (33:16). தேவனின் நீதி அவரது குமாரனாகிய இராஜாவை மாத்திரமல்ல, அவரது மக்களையும் நிரப்புகிறது.
இயேசுவின் வருகையைப் பற்றிய நேரடியான முன்னறிவுப்புகள் வெறும் ஆரம்பம் மட்டுமே. தீர்க்கதரிசிகள் “கர்த்தருடைய நாள்” என்று அழைக்கும் யூதாவிற்கும் மற்ற தேசங்களுக்கும் ஏற்பட்ட நியாயத்தீர்ப்பு, பிரதான நியாயத்தீர்ப்புக்கான ஓர் சிறிய எதிர்ப்பார்ப்பு மட்டுமே, இவ்வித நியாயத்தீர்ப்பை சிலுவையில் கிறிஸ்து மரிக்கும்பொழுது ஏற்பட்ட பூமியதிர்ச்சிகளும், வானம் இருளடைந்ததும் அவற்றை எதிர்நோக்கி குறிப்பிடுகிறது (மத் 27:45,51). எனவே, எப்பொழுது எரேமியா தேசங்கள் மீதான தேவனின் நியாயத்தீர்ப்பை பற்றி பேசுகிறதோ, கிறிஸ்துவின் சிலுவையைப்பற்றி நாம் அங்கு காணமுடியும். அதேபோல், எப்பொழுதெல்லாம் எரேமியா, யூதாவின் மீட்பைக் குறித்து பேசுகிறாரோ (எரே 30-33), அப்பொழுது கிறிஸ்துவின் உயிரத்தெழுதலில் வந்தடைந்த, இன்னும் முழுமையடையாமலும் இறுதியானதுமல்லாத தேவனின் நித்திய ராஜ்யத்தைப்பற்றியும் வாசிக்கிறோம்.
எனவே, எரேமியா நமது வாழ்க்கைக்கும் சாட்சியிடுகிறது. எரேமியா முன்னறிவித்த நியாயத்தீர்ப்பானது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் முழுமையாக நிறைவேறும். பழைய சிருஷ்டிகள் மீதான நியாயத்தீர்ப்பானது எரேமியா முன்னறிவித்த நித்திய மீட்பிற்கு நம்மை கொண்டுச் செல்லும். எனவே, எரேமியாவின் புத்தகமானது, எல்லா காலங்களில் வாழும் வாசகர்களுக்கு பிரயோஜனமாக உள்ளது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.