3-Things-about-Jeremiah
எரேமியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
06-05-2025
3-Things-about-Jeremiah
எரேமியா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
06-05-2025

யாக்கோபு நிருபத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 3 பிரதான காரியங்கள்- Dr.கிரிகோரி ஆர். லேனியர்

3-Things-You-Should-Know-about-James

யாக்கோபால் எழுதப்பட்ட இந்த நிருபமானது, ஒரு துணை தொகுப்பாக பிரிக்கப்பட்டு, ‘கத்தோலிக்கம் (உலகளாவிய)’ அல்லது ‘பொது நிருபம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட சபைக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்கோ எழுதப்படாமல் உலகளாவிய (அதிகமாக அல்லது குறைவாகவுள்ள) எல்லா சபைகளுக்கும்  எழுதப்பட்டிருப்பதாலேயேதான். இப்படிப்பட்ட நிலையில் இந்த நிருபம் “சிதறிப்போன பன்னிரண்டு (ஆவிக்குரிய) கோத்திரங்களுக்கும்” (யாக்கோபு 1:1) எழுதப்பட்டுள்ளது, ஏனெனில் உலகெங்கும் அவருடைய ஜனங்கள் சிதறப்பட்டு காணப்படுவதன் அடையாளமாக  இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது. இந்த சிறிய கட்டுரையில்,  இந்த நிருபத்தை பற்றி அறிய வேண்டிய மூன்று முக்கியமான காரியங்களைப் பற்றி சிந்திக்கலாம்.

1. இயேசுவின் உடன் பிறந்த சகோதரான யாக்கோபு இதை எழுதியிருக்க வேண்டும்.

இந்த நிருபத்தின் ஆக்கியோனாகிய யாக்கோபிலிருந்து நாம் சற்று தொடங்கலாம். “யாக்கோபு”  என்ற பெயருக்கு நான்கு போட்டியாளர்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறார்கள். முதலாவதாக, யோவானின் சகோதரர் யாக்கோபு (செபதேயுவின் குமாரர்கள், மத். 4:21) இந்த நிருபத்தை எழுதுவதற்கு முன்பாகவே இரத்த சாட்சியாக மரித்துப் போனார் (அப்போஸ்தலர் 12:2). இரண்டாவதாக அல்பேயுவின் மகன் யாக்கோபும் (மத். 10:3), மூன்றாவதாக யூதாவின் தந்தை யாக்கோபும் (லூக்கா 6:16) ஆரம்பகால திருச்சபையில் மிகவும் அறியப்படாதவர்களாக இந்த இருவரும் இருக்கின்றனர். மட்டுமல்ல அவர்கள் நிருபத்தில் “யாக்கோபு” என்று மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள். இதனாலேயே  இந்த நிருபத்தின் ஆக்கியோன் இயேசுவின் சகோதரரான யாக்கோபே(மத். 13:55) என்று நாம் உறுதிப்பட கூறலாம். இந்த யாக்கோபு ஒரு அவிசுவாசியாகத் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினவராவார் (யோவான் 7:5).ஆனால் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  உயிர்த்தெழுதலை தரிசித்ததினால் (1 கொரி. 15:7), அவர் ஆரம்பகால திருச்சபையின் தூணாகவும், ஒருவேளை ஒரு அப்போஸ்தலனாகவும்  (கலா. 1:19; 2:9) கூட காணப்பட்டிருக்கலாம். இந்த நிருபத்தின் ஆக்கியோனை பற்றி நாம் ஏன் இப்பொழுது சிந்திக்க வேண்டும்?

முதலாவதாக, யாக்கோபு சுவிசேஷத்தின் வல்லமையினாலேயே  மாற்றப்பட்டார், அதனால் அவர் எந்தவிதமான மேன்மைக்கும் இடமளிக்காமல் இயேசுவுடனான தன்னுடைய உலகப் பிரகாரமான உறவை மையப்படுத்த விரும்பவில்லை. அவர் தன்னை “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்” (யாக்கோபு 1:1) என்று வெறுமனே குறிப்பிடுகிறதை காண முடிகிறது. இரண்டாவதாக, இந்த யாக்கோபு, எருசலேம் அப்போஸ்தல கூடுகையில்  ஒரு முக்கியமான உரையை நிகழ்த்துகிறார், அதனடிப்படையில் இயேசு கிறிஸ்துவினுடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் எந்தவிதமான  சமய சடங்கு மற்றும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் புறஜாதிகளையும், யூதர்களையும் எவ்வாறு ஒரே விசுவாசத்தின் கீழாக ஒன்றிணைத்தது (அப்போஸ்தலர் 15:13–21) என்று ஆமோஸ் 9:11–12 வசனங்களில் மேற்கோள் காட்டப்படுகிறார்.  அவர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை  அனுபவித்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார். மூன்றாவதாக,  ஆவியில் எளிமையுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பார்கள் (யாக்கோபு 2:5; மத். 5:3–5),  துயரப்படுகிறவர்கள் மற்றும் அழுகிறவர்கள் (யாக்கோபு 4:9; லூக்கா 6:25), தாழ்மையுள்ளவர்களை உயர்த்துவது (யாக்கோபு 4:10; மத். 23:12), மற்றும் “ஆம்”/”இல்லை” (யாக்கோபு 5:12; மத். 5:34–37) போன்ற தனது சகோதரரான இயேசுகிறிஸ்துவின் நேரடி போதனைகளை அவர் தன்னுடைய நிருபத்தில் பயன்படுத்துகிறதை பார்க்கலாம். அவரது மூத்தசகோதரனின் சுவிசேஷம்  அவருடைய சுவிசேஷமாகவே மாறிவிட்டது.

2. கிறிஸ்தவ வாழ்விற்கான நடைமுறை காரியங்களை  நோக்கமாகக் கொண்டு யாக்கோபு இதை எழுதியிருக்கிறார்.

ஆக்கியோனாகிய யாக்கோபு தன்னுடைய வாழ்க்கையை சுவிசேஷத்தின் மூலமாக  வடிவமைத்துக்கொண்டது மட்டுமல்ல இந்த நிரூபத்திலும் அதையே தன்னுடைய நோக்கமாக கொண்டு எழுதுகிறார். சபை பிதாக்கள் தொடங்கி நவீனகால வேத விளக்கவுரையாளர்கள்வரை, இந்த நிருபத்தின் துல்லியமான அமைப்பு மற்றும் நோக்கங்கள் குறித்து நீண்டகாலமாக விவாதிக்காமலில்லை. ஏனெனில் இது ரோமர் போன்ற புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள  நடைமுறை காரியங்களை உறுதியாக எடுத்துரைக்கவில்லை. அதினால் இது சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை என்று நாம் என்ன வேண்டிய அவசியமும் இல்லை. ஏற்கனவே கிறிஸ்துவுக்குள்ளாக சகோதர, சகோதரிகளாக இருப்பவர்களுக்கான நடைமுறை சத்தியங்களை எடுத்துரைப்பதையே  நோக்கமாகக் கொண்டிருப்பதால் இது தளர்வுற்றதைப் போல காணப்படுகிறது (யாக்கோபு 1:9, 16, 19; 5:19). யாக்கோபு ஒரு மேய்ப்பனாகிய தந்தையைப் போல இங்கே செயல்பட்டு, சுவிசேஷ நற்செய்தியானது வாழ்க்கையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதைக் கிறிஸ்தவர்களுக்குக் எடுத்துக்காட்டுகிறார். பாவத்தை பின்பற்றுகிறவர்களாக இராமல் தெய்வீக பாதையை தேர்ந்தெடுக்கும்படியாக அவர் தன்னுடைய  நிருபத்தை வாசிப்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார். பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் நாம் சிந்திக்கலாம்.

• கீழ்படிதல்: திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரம் அல்ல- அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்கோபு 1:2–27).

ஐக்கியம்: மற்றவர்களை பட்சபாதமில்லாமல் அன்பு கூறுங்கள் — உங்களுக்கு பிரியமானவர்களை மட்டும் அன்புகூறாதீர்கள் (யாக்கோபு 2:1–13).

• கீழ்படிதல்: உங்கள் விசுவாசத்தை நடைமுறைப்படுத்துங்கள்— கிரியைகளற்ற விசுவாசமானது செத்தது (யாக்கோபு 2:14–26).

• ஐக்கியம்: மற்றவர்களை ஆசீர்வதிக்க உங்கள் நாவைப் பயன்படுத்துங்கள் – சபிப்பதற்கு அதைப் பயன்படுத்தாதீர்கள் (யாக்கோபு 3:1–18).

• கீழ்படிதல்: பரிசுத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் – உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாதிருங்கள் (யாக்கோபு 4:1–17).

• ஐக்கியம்: ஏழைகளை நேசியுங்கள் – தேவபக்தியற்ற ஐஸ்வரியத்தை தேடாதிருங்கள் (யாக்கோபு 5:1–6).

• கீழ்படிதல்: பொறுமையை நடைமுறைப்படுத்துங்கள் – துன்பத்தில் முறுமுறுக்காதிருங்கள் (யாக்கோபு 5:7–20).

ஆக்கியோனாகிய யாக்கோபு, கீழ்படிதல் மற்றும் ஐக்கியம் ஆகிய இரண்டு முக்கியமான கருப்பொருள்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து கண்ணோக்கி, வெறும் கொள்கைகளை மட்டும் நோக்காமல், போதக ஆலோசனை வழியில், அடிப்படை நடைமுறை சத்தியங்களுக்கு கீழ்படிந்துவாழ அழுத்தங்கொடுக்கிறார். சுவிசேஷம் நமது வேராகயிருக்குமானால், கனிகளும் அதற்கேற்றார் போல் காணப்பட வேண்டியது அவசியமாகும்.

3. பவுலின் நிருபங்களோடு முரண்படாமல், அதற்கு ஒத்தவண்ணமாகவே யாக்கோபின் நிருபம் காணப்படுகிறது.

மேற்கண்ட நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, பவுலின் எழுத்துக்களில் காணப்படும் நியாயப்பிரமாணம்- சுவிசேஷம் ஆகிய இரண்டிற்குமான தெளிவு யாக்கோபிடம் இல்லை என்ற மார்ட்டின் லூத்தரின் குற்றச்சாட்டை நாம் மீண்டும் பரிசீலிக்கலாம். இந்தப் பிரச்சினை யாக்கோபு 2:24-ல் ஒரு உச்சத்திற்கு வருகிறது: “ஆதலால் மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானேன்று நீங்கள் காண்கிறீர்களே” என்று கூறுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், “நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான்” (ரோமர் 3:28) என்ற பவுலின் கூற்றுக்கு இது ஒரு வெளிப்படையான முரண்பாடாகத் தெரிகிறது.

ஆனால் அவ்வளவு சீக்கிரமாக அவசரப்பட வேண்டியதில்லை. ரோமர் 1:18–3:20 இல் பவுலின் வாதமானது, நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியும் அவிசுவாசிகளாயிருக்கும் தோல்வியுற்ற நிலைமையிலிருந்து (ரோமர் 1:18–3:20), விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு முன்பாக தகுதியுள்ளவர்களாக்கப்பட்டு (ரோமர் 3:21–4:23), நீதிமானாக்கப்படுவதிலிருந்து வரும் புத்திரசுவிகாரம் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதலுக்கும்(ரோமர் 5–8) நேராக வழி நடத்துகிறது. வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால் கிரியைகளினாலல்ல, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம் என்கிற பவுலின் கூற்று, ஒருவர் எவ்வாறு இரட்சிக்கப்படுகிறார் என்பது பற்றிய சத்தியத்திற்கே அடித்தளம் அமைக்கிறது.

ஆனால் யாக்கோபு இங்கே மற்றொருவிதமான வாதத்தை முன்வைக்கிறார். ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும் (யாக்கோபு 2:14), அதற்கேற்ற கிரியைகளை தன்னுடைய குணாதிசயத்தில் காண்பிக்காமல் இருப்பவர்களுக்குறிய வாதத்தையே (யாக்கோபு 2:16) முன் வைக்கிறார். கிரியைகளில்லாத விசுவாசமாயிருக்குமானால், அத்தகைய விசுவாசம் உண்மையான விசுவாசம் அல்ல (யாக்கோபு 2:17). அது வெறுமையானது அல்லது செத்தது. அப்படிப்பட்ட விசுவாசம் பிசாசுகள் கூட தங்களுடைய அறிவாற்றலினால் தேவனுக்கு பயந்து நடுங்கும்  விசுவாசத்தை விட  வேறுபட்டதல்ல (யாக்கோபு 2:19) என்கிறார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், யாக்கோபு இங்கே வேறொரு கேள்விக்கு பதிலளிக்கிறார்: இரட்சிக்கப்பட்ட பிறகு ஒருவன் என்ன செய்ய வேண்டும்? என் விசுவாசம் உண்மையானது என்பதை நான் எவ்வாறு நிரூபிப்பது? யாக்கோபு தனது பதிலை மிகவும் வெளிப்படையான வார்த்தைகளில் – “கிரியைகள்” மூலம் என்று கூறினாலும்,  அவரது அடிப்படை புரிதலானது பவுலின் மற்ற சத்தியங்களிலிருந்து வேறுபட்டதல்ல (பிலி. 2:12 ஐப் பார்க்கவும்). ரோமர் நிருபத்தில் நீதிமானாக்கப்படுதலில் யாக்கோபின்  கேள்விக்கான பதிலை இன்னும் பவுல் அங்கே (ரோமர் 4ம் அதிகாரத்தில்) வெளிப்படுத்தவில்லை என்று தான் கூற முடியும்.

இந்த வெளிச்சத்தில் நாம்  காரியங்களை உற்று நோக்கும்போது, ​​யாக்கோபு பவுலின் உபதேசங்களுக்கு எங்கும் முரண்படவில்லை மாறாக அந்த சத்தியங்களை முழுமையடைய செய்கிறார் என்றே சொல்ல வேண்டும். முடிவாக, கிறிஸ்தவ நடைமுறை வாழ்க்கைக்காதாரமான, சுவிசேஷத்தை மேன்மையாக சித்தரிக்கும் பவுலின் எந்த நிருபங்களின் சத்தியங்களையும் இது வழிவிலக செய்யும் நிருபமல்ல இந்த யாக்கோபின் நிருபம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கிரிகோரி ஆர். லேனியர்
கிரிகோரி ஆர். லேனியர்
ஆசிரியரைப் பற்றி: Dr. Gregory R. Lanier - டாக்டர் கிரிகோரி ஆர். லேனியர், புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள சீர்திருத்த இறையியல் கல்லூரியில் புதிய ஏற்பாட்டின் இணைப் பேராசிரியராகவும், புளோரிடாவின் லேக் மேரியில் உள்ள ரிவர் ஓக்ஸ் திருச்சபைல் இணைப் போதகராகவும் உள்ளார். அவர் Old Made New, The Septuagint: What It Is and Why it Matters, மற்றும் லூக்காவின் சுவிசேஷம் பற்றிய வரவிருக்கும் விளக்கவுரை உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.