3-Things-You-Should-Know-about-Hosea
ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
24-04-2025
3-Things-about-Daniel
தானியேலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 பிரதான காரிங்கள்
01-05-2025
3-Things-You-Should-Know-about-Hosea
ஓசியாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 அடிப்படை காரியங்கள்
24-04-2025
3-Things-about-Daniel
தானியேலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 பிரதான காரிங்கள்
01-05-2025

எசேக்கியேல் புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

3-Things-about-Ezekiel

ஜஸ்டின் எஸ்ட்ராடா

எசேக்கியேல் புத்தகத்தின் பக்கங்கள் அநேக வகையான பதற்றங்களால் நிறைந்துள்ளன: பாபிலொனில் நாடு கடத்தப்பட்ட தேவனின் மக்கள், எருசலேமில் முற்றுகையிடப்பட்ட மக்கள், 390 நாட்கள் இடது பக்கமாகவே படுத்துக்கொண்டும், தனது மனைவியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க மறுக்கப்படும் ஆசாரிய வம்சாவளியை சேர்ந்த காயமடைந்த தீர்க்கதரிசி, அநேக புரிந்துக்கொள்ளமுடியா உருவகங்களாலும், தேவ வாக்குகளாலும் நிறைந்த தரிசனங்கள் ஆகியவைகளே (எசே 4:4-8, 24:15-24).  இவைகளோடு கூட எசேக்கியலில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் குணாதிசயங்களில் மாபெரும் பதற்றங்கள் இருப்பது போல தோன்றும்: தேவன் உயர்ந்தவராயிருப்பினும் அவர் தம் மக்களுக்கு அருகானவர், பாவத்தை வெறுக்கும் பரிசுத்தராக இருப்பினும் அவர் மன்னிக்கிறவர், தமது நியாயத்தீர்ப்பில் பயங்கரமானவராக இருப்பினும் இரக்கத்தில் ஆச்சரியமானவர். இவையனைத்தும் வாசகர்களை குழப்பமடைய செய்து சோர்ந்துபோக செய்ய கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பினும், இப்புத்தகம் தேவனின் குணாதிசயங்களையும், அவரின் மகிமையையும் தனித்துவமான போதனைகளில் நமக்கு காண்பிக்கிறது.

கீழ்க்கண்ட மூன்று காரியங்கள் இவ்வகையான பதற்றங்களை நீக்கி, இதில் கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களில் மகிழ்ச்சியடைய உதவும்.

1.எசேக்கியேலின் விசித்திரமான தரிசனங்களும், தீர்க்கதரிசனங்களும் மகிமையான மற்றும் அறியக்கூடிய தேவனை வெளிப்படுத்துகின்றன.

எசேக்கியேல் புத்தகத்தை வாசிப்பதினால் நீங்கள் குழப்பமடைய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. இப்புத்தகத்தின் ஆரம்ப தரிசனத்திலும் அமைப்பிலும் பயங்கரமான தோற்றங்களை கொண்டுள்ள கேரூபீன்களாக அடையாளம் காணப்படும் நான்கு உயிரினங்கள், மரணதிகில்களை உண்டாக்கும் “கர்த்தருடைய மகிமையின் சாயலின்” தெய்வீகத்தன்மை மற்றும் அவரின் இரக்கமுள்ள செயல்கள், மற்றும் சுருளை உட்கொள்வது, ஊமையாக இருப்பது உட்பட இப்புத்தகத்தில் உள்ளன (எசே 1:1-3:27, 10:20). மேலும் இவைகள் அனைத்தும் புத்தகத்தின் ஆரம்பம் மட்டுமே. மகிமையான தேவன் மற்றும் அவரது தூதர்களின் அடையாளங்கள், உருவங்கள், அறிவிப்புகள் மற்றும் வருகையும் புத்தகம் முழுவதுமாக மீண்டும் மீண்டும் வருகின்றன (எசே 10:1-22, 40:1-4).

ஆனால் ஒன்றை அறிந்துக்கொள்ளுங்கள்: நீங்கள் தேவனைப்பற்றிய ஆச்சரியங்களை அனுபவிக்கவேண்டும். மகத்துவமான தேவனின் மகிமையை பார்ப்பது என்பது நமக்கு ஆச்சரியங்களையும், தாழ்மையையும் கொண்டுவருகிறது. இவைகளை அடைந்தவுடன் எசேக்கியேல் முகங்குப்புற விழுகிறார் (1:28). ஆவியினால் நிரப்பப்பட்ட அவரது ஊழியத்தை காண்பிக்கும் இந்த பகுதியானது, நம்மிலும் பயம் நிறைந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது. எசேக்கியேலைப் போன்ற, பாபிலோனின் சிறையிருப்பில் உள்ளவர்களை போன்ற, நம்மைப் போன்ற எந்த மனிதனும் நமது சொந்த முயற்சியினால் ஒருபோதும் தேவனை அறியமுடியாது: தேவனே தம்மைப்பற்றி நமக்கு தெரியப்படுத்தவேண்டும். இருப்பினும், நமது சர்வ இறையாண்மையுள்ள தேவன் அவர் நமக்கு நெருக்கமானவராகவும், இவ்வுலகில் நடைபெறுகிற நிகழ்வுகள் மூலமாகவும் நமக்கு தம்மைப்பற்றி காண்பிக்கிறார் என்பதை எசேக்கியேல் புத்தகம் இஸ்ரவேலுக்கும் மற்ற நாடுகளுக்கும் கூறுகிறது, “ அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துக்கொள்வீர்கள்.” (எசே 7:4, 9, 11:10, 13:9).

வருத்தமான காரியம் என்னவென்றால், மனிதனின் பாவமும், விசுவாச துரோகமும் தான் , முதலாவது பரிசுத்த தேவன் நியாயத்தீர்ப்பில் தம்மை வெளிப்படுத்தும்படி செய்கிறது. இது நம்மை அடுத்த காரியத்திற்கு கொண்டு செல்கிறது.

2. எசேக்கியேலின் ஆசாரிய வம்சமானது தேவனின் பரிசுத்த தன்மையிலிருந்து வெளிப்படுகிறது.

புத்தகத்தின் ஆரம்பத்தில் எசேக்கியேல் தன்னை ஒரு ஆசாரியனாக அடையாளப்படுத்துகிறார், ஆனால் எருசலேமில் அவர் ஆசாரியராக பணியாற்ற அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை (எசே 1:3). அதற்கு பதிலாக கர்த்தர் அவரை தீர்க்கதரிசியாக ஊழியம் செய்ய அழைக்கிறார். முதலாவது தேவனின் நியாயத்தீர்ப்பை கலகம் செய்துக்கொண்டிருக்கிற தனது சொந்த ஜனங்களுக்கும், பின்பு துன்மார்க்க நாடுகளுக்கும் அறிவிக்கிறார் (எசே 1:1-24, 24:27, 25:1-32:32). எசேக்கியேலின் ஊழியம் மாற்றப்பட்டிருப்பினும், தனது ஆசாரிய முறைமையின் ஞானத்திலிருந்து, தேவனின் பரிசுத்தத்தை அவரது நியாயத்தீர்ப்பில் மிகவும் அழுத்தமாக பிரசங்கிக்கிறார். 

எசேக்கியேல் தேவ ஆவியால் நிரப்பப்பட்ட தனது தீர்க்கதரிசன ஊழியத்தில், தேவனின் கட்டளைகளுக்கு எதிராக செயல்பட்ட பழைய உடன்படிக்கையின் திருச்சபையின் மீறுதல்களையும், விக்கிரகாரதனை மூலம் அசுத்தபடுத்தபட்டதையும் வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிக்கிறார் (எசே 5:6, 16:59). இது போன்ற பாவங்கள் தேவனின் பரிசுத்த நாமத்தை நிந்தித்து, தேவன் தனது பரிசுத்த தன்மையை காண்பிக்கும்படி அவரது மகியையுள்ள பிரசன்னத்தை நீக்குவதற்கும், பரலோக சிங்காசனத்தின் ஓர் அடையாளமாகிய எருசலேமில் உள்ள சிங்கானத்தை நீக்கி மாபெரும் அழிவிற்கு நேராகவும் அவர்களின் பாவங்கள் கொண்டு செல்கிறது (எசே 20:9, 14). எசேக்கியேல் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இஸ்ரவேலின் பாவத்தின் கொடூரங்களை காண்பிக்கிறார். (எசே 23:1-49) ல் சொல்லப்பட்ட விசுவாசமற்ற இரண்டு சகோதரிகளின் நிலைமையை விட வேறொன்றும் இதற்கு சாட்சியில்லை. எருசலேமின் வீழ்ச்சியின் மீது மற்ற நாடுகள் மகிழ்ச்சி கொள்ளாதபடிக்கும், தங்களை யாரும் அழிக்கமுடியாது என்று அவர்கள் நினைக்காதபடிக்கும், அனைத்து நாடுகளையும் பிரதிபலிக்கும் இஸ்ரவேலை சுற்றியிருக்கும் ஏழு ராஜ்யங்களுக்கு தேவன் எசேக்கியேல் மூலமாக நியாயத்தீர்ப்பையும், அழிவின் செய்தியையும் அறிவிக்கிறார். அவர்களும் தேவனுக்கு எதிரான தங்களின் பாவங்களுக்கு பதில் சொல்லவேண்டும், மற்ற அனைத்து நாடுகளும் அவர்களின் அழிவில் தேவனின் மகிமையை பார்க்கும்.

ஆனால், இஸ்ரவேல் நம்பிக்கையை இழந்துபோகாதபடிக்கு, மற்றொரு ஆசாரிய முறையை எதிர்ப்பார்த்திருப்பதற்கு எசேக்கியேல் அழைக்கிறது: தேவாலயம்.

3. எசேக்கியேலின் மீட்பின் தீர்க்கதரிசனங்களை, தேவனின் ஆலயமாக கிறிஸ்துவே நிறைவேற்றுகிறார்.

நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் இஸ்ரவேலின் மகிமையும், பரிசுத்தமுமான தேவன் மீட்டெடுப்புக்கான தீர்க்கதரிசனங்களை முன்னறிவிக்கிறார். எசேக்கியேல் முன்னிலையில் உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்த தேவன், தனது உடன்படிக்கையின் மக்களையும் நிச்சயமாக உயிரடையச் செய்வார் (எசே 37:1-14). இருப்பினும், இஸ்ரவேலர் நியாயத்தீர்ப்புக்கு முன்பு இருந்த நிலையை மட்டும் தேவன் கொண்டுவராமல் அதோடு கூட, அவர்களை சுத்திகரித்து, அவர்களுக்கு புதிய இருதயத்தை அளித்து, அவர்களின் பழைய ராஜ்யத்தை மீண்டும் புதுப்பித்து, அவர்கள் மீது நீதியுள்ள ஓர் தாவீதை ஏற்படுத்தி வைத்து அவர்கள் நடுவில் தேவன் வாழுவார் (எசே 36:22, 37:28). “தேவன் அங்கே இருக்கிறார்.” (40-48) என்ற தேவனின் நித்திய பிரசன்னத்திற்கு அடையாளமாகிய புதிய ஆலயத்தின் காட்சி வழியாக, மக்களின் மாற்றப்பட்ட நிலையின் உடன்படிக்கையின் சமாதானத்தை எசேக்கியேல் கற்பனை செய்கிறார்.

எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் தேவாலயத்தின் மறுசீரமைப்பிற்கும் அப்பாற்பட்டது, அது இயேசுவில் பூரணமாக நிறைவேறுகிறது. அப்போஸ்தலனாகிய யோவானின் பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் சாட்சியிடப்படுகிறது. தேவ மகிமையின் முழுமை மனிதனாக வந்த தேவகுமாரனில் வெளிப்படுகிறது, கிறிஸ்து தனது மக்கள் மத்தியில் தங்கி தேவனை அறிவித்தார்(யோவான் 1:14-18). இயேசு தன்னை ஆலயத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார், அதின் அழிவை தனது சிலுவை மரணத்தோடும், அதின் மறுசீரமப்பை தனது உயிர்த்தெழுதலோடும் ஒப்பிடுகிறார் (யோவான் 2:18-22). மேலும் ஆலயத்திலிருந்து பாய்ந்தொடும் நதி உலகின் அநேக நாடுகளை உயிர்ப்பிப்பதைப் போல எசேக்கியேல் காண்பிக்கிறது, இயேசுவும் தன்னை ஜீவ தண்ணீரின் ஆதாரமாக அறிவிக்கிறார் (யோவான் 4:1-43, 7:37-39). யோவானும் தனது கடைசி தரிசனத்தில் தேவன் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்திலிருந்து பாயும் அதே நதி தேசங்களிடையே சிதறிக்கிடக்கும் தம் மக்களுக்கு சுத்திகரிப்பையும், மீட்பையும் கொண்டு வந்ததை காண்கிறார் (வெளி 22). 

எசேக்கியேலின் மாபெரும் பதற்றம், அற்புதமான மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் மலர்ந்திருக்கிறது: தேவன் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் நித்திய பிரசன்னம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஜஸ்டின் எஸ்ட்ராடா
ஜஸ்டின் எஸ்ட்ராடா
Rev. ஜஸ்டின் இ. எஸ்ட்ராடா, கிங்ஸ்வில்லில் உள்ள ரெடீமர் பிரஸ்பிடேரியன் திருச்சபையின் போதகராவார்.