Should I Go to Seminary

நான் இறையியல் கல்லூரிக்கு செல்ல வேண்டுமா?

09-07-2026
Should I Go to Seminary

நான் இறையியல் கல்லூரிக்கு செல்ல வேண்டுமா?

09-07-2026

கிறிஸ்துமஸ் நேரங்களில் நாம் ஏன் பாடுகிறோம்?

Why Do We Sing at Christmas?

வரலாறு முழுவதுமாக மக்கள் பாடுவதை விரும்பியுள்ளனர். விளையாட்டுகள் மத்தியிலோ அல்லது பிறந்த நாள் நிகழ்ச்சியிலோ நாம் ஆர்வத்தோடு பாடுகிறோம். சில நேரங்களில் இசை திறன் நமக்கு இல்லை என்றாலும் பொதுவெளியில் நாம் பாடத்தான் செய்கிறோம். கிறிஸ்துமஸ் சமயத்தில் குழுக்களாக பாடுவது ஒரு கலாச்சார மரபாகும். ஆனால் கிறிஸ்துமஸ் பாடல்களையும், பாமாலைகளையும் ஒருவேளை நாம் அவற்றை நேர்த்தியாக பாடினாலும், அவற்றின் சொற்கள் உணர்த்தும் பொருளில் எந்த ஆர்வமும் நமக்கு இல்லை என்றாலும் கூட நம் மீது ஏன் அத்தகைய தாக்கத்தை இவைகள் ஏற்படுத்துகிறது? 

ஆராதனையில் பாடுவது எவ்வாறு பாடப்பட வேண்டும் என்பதை பிரசங்க பீடத்திற்கும் விசுவாசிகளுக்கும் எப்பொழுது சவாலாக அமைந்திருக்கிறது. 1761-ல், ஜான் வெஸ்லி மெதடிஸ்ட் சமூகத்திற்கு அது குறித்து அறிவுறுத்தும் நோக்கில் “பாடுவதற்கான வழிகாட்டுதல்கள்” என்ற ஒரு தொகுப்பை எழுதினார். அது வெளியிடப்பட்டதிலிருந்து, மெதடிஸ்டுகளைத் தாண்டி பலரையும் அது பாதித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களில் இரண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

உற்சாகத்துடனும் நல்ல தைரியத்துடனும் பாடுங்கள். செத்தவனைப் போலவோ அல்லது உறக்கத்திலுள்ளவனைப் போலவோ பாடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; ஆனால் உங்கள் குரலை வலிமையுடன் உயர்த்துங்கள். நீங்கள் சாத்தானின் பாடல்களைப் பாடியபோது இருந்ததைவிட, இப்போது உங்கள் குரலுக்கு அதிகமாகப் பயப்படவோ, அது கேட்கப்படுவதைக் குறித்து அதிகமாக வெட்கப்படவோ வேண்டாம்.

அடக்கமாகப் பாடுங்கள் – சபையின் மற்றவர்களிடமிருந்து தனித்துக் கேட்கும் அளவுக்குக் கூச்சலிடாதீர்கள்; அவ்வாறு கூச்சலிட்டு நல்லிணக்கத்தைச் சிதைத்துவிடாதீர்கள்; மாறாக, உங்கள் குரல்களை ஒன்றிணைத்து ஒரே இனிமையான ஒலியை உருவாக்க முயலுங்கள்.

நமது குரல் பலவீனமாக இருந்தாலும் கூட கிறிஸ்துமஸ் சமயத்தில் முழு பலத்தோடு நம் குரலை உயர்த்தி பாடுகிறோம். இது ஒருவேளை நாம் அந்த பாடல்களை நன்கு அறிந்திருப்பதினால் இருக்கலாம். மெய்யாகவே, நல்ல பரீட்சியம் நம்மை ஒரு காரியத்தில் தைரியத்தோடு பங்கு பெறுவதற்கு உற்சாகப்படுத்துகிறது. பாடல்களில் நமது திறமையை பார்க்காமல், “இருதயத்திலேயே கர்த்தரை பக்தியுடன் பாடுவதற்கு” அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகிறார் (கொலொ 3;16). 

எவ்வாறு பாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதற்கு மிக எளிமையான இடங்களில் ஒன்றுதான் திருச்சபை. அங்குதான் நாம் எளிமையாக சங்கீதங்களையும், கீர்த்தனைகளையும், வாழ்விற்கான ஆவிக்குரிய பாடல்களையும் மீண்டும் மீண்டும் பாடுகிறோம். நம் வயது ஆனாலும் அந்தப் பாடல்களை நாம் மறப்பதில்லை, காரணம் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நாம் பாடுகின்ற இந்த தொடர்ச்சியான பாடல்கள்  நமது மூளையின் நரம்புகளைத் தூண்டி பாடல்களின் வார்த்தைகள் மற்றும் அதனுடைய மெட்டுக்களை மனதில் பதிய வைத்திருக்கிறது. முதியோர் இல்லங்களில் கிறிஸ்துமஸ் சமயத்தில், அதுவரை எதிலும் ஈடுபாடு காட்டாத குடியிருப்பாளர்கள், உற்சாகமடைந்து “ஜாய் டு தி வேர்ல்ட்” மற்றும் “சைலன்ட் நைட்” ஆகிய பாடல்களைப் பாடுகிறார்கள்.

வெறுமனே இந்த பாடல்கள் நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்கும் அப்பால், அநேக கிறிஸ்துமஸ் பாடல்கள் பல உபதேச சத்தியங்களை நமக்கு போதிக்கிறது. மார்ட்டின் லூத்தர் 1520 மற்றும் அதற்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட லுத்தரன் சபைகளின் வளர்ச்சிக்காக பாடல்களை ஒரு மிக முக்கியமான கருவியாக பயன்படுத்தினார். அவர்கள் திருச்சபைப் பாடல்களையும் வினா விடைகளையும் பாடல்களாக பாடியதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது; ஏனெனில், புதிய திருச்சபைகளுக்குப் பாடல் ஒரு முக்கியக் கற்பித்தல் கருவியாகத் திகழ்ந்தது. 

கிறிஸ்தவ சமுதாயத்தில் பாடல்கள் நம்மை செதுக்கி வருகிறது. செயின் ஆண்ட்ருஸ் தேவாலயத்தில், ஆர். சி. ஸ்ப்ரௌல் வெறுமனே பாரம்பரியமாக செய்வதற்கு பதிலாக, ஆராதனையின் “ஏன்” என்பதை விளக்க அடிக்கடி நேரம் ஒதுக்கினார். ஒரு பாடல் பாடப்பட்ட பிறகு “நீங்கள் இப்போது என்ன பாடி கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருகிறீர்களா” என்று கேட்பார். அவரைப் பொறுத்தவரை தேவனுடைய வார்த்தையை ஜீரணிப்பதற்கு பாடல் ஒரு இன்றியமையாத வேதிப்பொருளாக இருந்தது. 

கிறிஸ்துமஸ் கீர்த்தனைகளில் இறையியல் எவ்வாறு செயல்படுகிறது? சில உதாரணங்களைப் பார்ப்போம்.

உலகிற்கு மகிழ்ச்சி, ஆண்டவர் வந்துவிட்டார்

லோவெல் மேசனால் “ஹேண்டலின் இசையிலிருந்து மாற்றியமைக்கப்பட்ட” ஆன்டியோக் என்னும் மெட்டில் இது பாடப்பட்டுள்ளது. ஐசக் வாட்ஸின் இந்த உரை, மகிமை, இறையாண்மை, பரிசுத்தம், சத்தியம் மற்றும் கிருபை ஆகிய கருப்பொருள்களை ஆராய்கிறது. இது எந்தவொரு பிரசங்கியாரும் மேற்கோள் காட்டக்கூடிய, கடவுளின் பண்புகளின் ஒரு தொகுப்பாகும்.

பல கிறிஸ்துமஸ் பாடல்கள் நமக்கு இன்பத்தை அளிப்பது மட்டுமல்லாமல் அவைகள் கோட்பாடு ரீதியாக செழுமையானவைகளை போதிக்கின்றன. 

ஓ வாரும், வாரும், இம்மானுவேல்

வேனி இம்மானுவேல் என்ற எளிய கீர்த்தனை (ஆரம்பகாலப் பக்திப் பாடல்) மெட்டுக்கு இது பாடப்படுகிறது. இந்தப் பாடல், ஏசாயாவிலிருந்து தொடங்கி, குழந்தைப் பருவத்தில் இயேசுவின் இயல்பு மற்றும் நோக்கம் குறித்த பல குறிப்புகள் வழியாகச் சென்று, இம்மானுவேலின் வருகைக்காக எழுப்பப்படும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான வேண்டதலாகும்.

என் மக்களை, ஆறுதல்படுத்துங்கள், ஆறுதல்படுத்துங்கள்.

ஜெனீவா சங்கீதப் புத்தகத்தின் இசையமைப்பாளரான லூயிஸ் புர்ஜோயிஸ், ஏசாயா 40:1–2- ஐ அடிப்படையாகக் கொண்டு ‘தாகம்’ என்ற பாடலுக்குப் பாடிய பாடல் இது. யோஹன்னஸ் ஒலியாரியஸ் எழுதிய இந்த பதினேழாம் நூற்றாண்டு உரை, வார்த்தையின் தீர்க்கதரிசன வல்லமை குறித்தும், ஒரு இரட்சகரை அனுப்பியதில் கடவுளின் நோக்கம் குறித்தும் கிறிஸ்தவ போதனைகளை வழங்குகிறது.

ஓ பெத்லகேமின் சிறிய நகரமே

எல்.ஹெச். ரெட்னரால் புனித லூயிஸ் ஆலயத்திற்காகப் பாடப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்த மெட்டு, மீகா 5:2- ல் உள்ள ஒரு தீர்க்கதரிசனத்தின் தெளிவான நிறைவேற்றத்தை வெளிப்படுத்துகிறது . பிலிப்ஸ் புரூக்ஸின் 1868-ஆம் ஆண்டுப் பாடல் வரியானது, இயேசுவின் பிறப்பைப் பற்றிய லூக்காவின் பதிவை, அதன் 4-ஆம் வசனத்தில் உள்ள தெளிவான நற்செய்தி ஜெபத்துடன் மொழிபெயர்த்துக் கூறுகிறது.

பெத்லகேமின் பரிசுத்த பிள்ளையே,
எங்களிடம் இறங்கி வாரும்;
எங்கள் பாவத்தை அகற்றி, உள்ளே பிரவேசியுங்கள்;
இன்று எங்களுக்குள் பிறப்பீராக.
கிறிஸ்துமஸ் தேவதூதர்கள்

அந்த மாபெரும் நற்செய்தியை அறிவிப்பதை நாங்கள் கேட்கிறோம்; எங்கள் ஆண்டவராகிய இம்மானுவேலே, எங்களிடம் வாரும், எங்களுடன் தங்கியிரும் .

செல்வந்தராக இருந்தவரே

சார்லஸ் எச். கிட்சன் ஏற்பாடு செய்த ஒரு பிரெஞ்சு பாடல், மற்றும் ஃபிராங்க் ஹூட்டன் உரை.
எல்லாப் பெருமைகளுக்கும் அப்பாற்பட்ட செல்வந்தனே,
அன்பிற்காக அனைத்தையும் இழந்தாய்; சிம்மாசனங்களைத் தொழுவத்திற்காகவும், நீலமணிகள் பதிக்கப்பட்ட முற்றங்களைக் குதிரைக் கொட்டகைக்காகவும் துறந்தாய் .

புகழுக்குரிய தேவனே,
அன்பின் பொருட்டே அனைத்தையும் செய்து மனிதனானாய்;
மிகவும் தாழ்ந்து, ஆனால் பாவிகளை உயர்த்துபவனே,
உனது நித்திய திட்டத்தின்படி விண்ணகத்தை நோக்கி.

வர்ணிக்க முடியாத அன்பாயரே,
மீட்பரே, அரசரே, உம்மை நாங்கள் வழிபடுகிறோம்.
எங்களுக்குள் வாசம் செய்யும் இம்மானுவேலே,
நீர் விரும்பும் விதமாக எங்களை ஆக்கும்.

நாம் ஏன் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுகிறோம்? நிச்சயமாக, அவை மகிழ்ச்சியைத் தருகின்றன, இயேசுவின் பிறப்பையும் வாழ்க்கையையும் நினைவுகூர உதவுகின்றன, மேலும் நம்மை ஆன்மீக ரீதியாக உருவாக்குகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, படைப்பு, மகிமை, கிறிஸ்துவின் மானிடத்துவம், மற்றும் பாவநிவாரணம் (சிலவற்றைக் குறிப்பிட) போன்ற கோட்பாடுகளை நமக்கு நன்கு பரிச்சயமான கீர்த்தனைகள் மற்றும் பக்திப் பாடல்கள் மூலம் நாம் வாசிக்கிறோம். இதன் மூலம், கிறிஸ்துவின் நற்செய்தியைத் தினமும் வாழ்ந்து காட்ட நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டெர்ரி யூண்ட்

டெர்ரி யூண்ட்

டாக்டர் டெர்ரி யூண்ட், புளோரிடாவின் சான்ஃபோர்டில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் இசைக் கல்லூரியின் ஆசிரிய உறுப்பினராகவும், ஒரு சுயாதீனக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு அவர் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் ஆர்கன் இசைக்கலைஞராகவும் தலைமை இசைக்கலைஞராகவும் பணியாற்றினார்.