09-10-2025
பெற்றோர்கள் உவமைகளாக உள்ளனர். நமது வாழ்க்கையின் கதைகள் நமது குழந்தைகளுக்கு அநேக பாடங்களை கற்றுத் தருகிறது. நமது வாழ்வு கற்பிக்கின்ற நாம் நம்புகின்ற மாபெரும் சுவிசேஷ கதை என்னவென்றால் அது மன்னிப்பைப் பற்றியது. தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் மன்னிக்கிறார், மற்றும் தேவனுடைய மன்னிப்பின் உயிருள்ள சாட்சி நம்மில் உள்ள மன்னிக்கும் இருதயம், அது வெறுமனே மன்னிப்பைப் பெறுவது மாத்திரமல்ல அதைக் கொடுக்கவும் செய்யும். நாம் நமது பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தில் மன்னிப்பைப் பற்றி கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும், ஆனாலும் நமது வாழ்வின் மூலம் அவர்களுக்கு நாம் மன்னிப்பின் உவமைகளாக மாறவேண்டும்.
