
1, 2, 3 யோவான் புத்தகங்களிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய காரியங்கள்
27-03-2025
யூதா நிருபத்திலிருந்து நாம் அறிய வேண்டிய மூன்று பிரதான காரியங்கள்
03-04-2025ஆபகூக் புத்தகம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

தேவனை மகிமைப்படுத்தும் நீதியின் மீதான ஆபகூக்கின் ஆழமான ஏக்கமும் மற்றும் அந்நீதி தாமதப்படுவதற்கான அவரது எதிர்மறையான புலம்பலும் இந்த புத்தகத்தை சம கால வாசகர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது. உலகெங்கும் நிறைந்திருக்கும் நம்மை கவலைக்குட்படுத்தும் செய்திகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் நாம் மூழ்கியிருக்கையில், அப்பிரச்சனைகளின் காரணங்களை சுவிசேஷத்தின் வெளிச்சத்தில் நாம் பார்க்கவில்லை என்றால் அப்பிரச்சனைகள் மிகப் பெரிதான ஒன்றாக தோன்றும். மேலும் ஆபகூக், தனது மற்றும் நண்பர்களுடைய பாவங்களை பற்றிய விழிப்புணர்வானது, பாவத்தின் பிரச்சனை மனிதனின் ஆத்துமாவில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையும் நாம் அனைவருடைய நிலையும் அவ்வாறே உள்ளது என்பதையும் காட்டுகிறது. ஆனால் யூதாவிலும் அதன் எல்லைகளுக்கு அப்பாலும் சூழ்நிலையின் தீவிரம் அதிகரித்த போதிலும், யூதாவிலோ அல்லது அந்நிய நாடுகளிலோ எதாவது ஏற்படுவதற்கு முன்பே இந்த தீர்க்கதரிசியின் விரக்தியான ஜெபங்களுக்கு தேவனின் பதில்கள், ஆபகூக்கின் சந்தேகம் மற்றும் விரக்தியின் நிலையிலிருந்து உறுதியான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கு அவரைக் கொண்டு வருகிறது.
இந்த சிறிய புத்தகத்தின் மூன்று முக்கிய காரியங்கள், ஆபகூக்கின் ஆத்தும தற்பரிசோதனைக்கான செயல்பாடுகளுக்கும், கிமு ஏழாம் நூற்றாண்டை போலவே தடுமாற்றமும் சுய அழிவையும் கொண்ட தற்போதைய உலகில் வாழும் நமக்கு நமது செயல்பாடுகள், அணுகுமுறைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் ஸ்திரமான வழிக்காட்டியாக இப்புத்தகம் அமைந்துள்ளது.
1.யூதாவின் நியாயத்தீர்ப்பைப் பற்றி தேவன் அநீதியுள்ளவரல்ல.
இந்த உண்மை, இப்புத்தகத்தின் ஆரம்பத்தில் ஆபக்கூக்கிற்கு சந்தேகமாக தோன்றுவதை நேரடியாக மறுதலிக்கிறது. ஆபகூக் நீதியின் தேவனை குற்றஞ்சாட்டுகிற எல்லைக்கு செல்லாவிட்டாலும், தேவன் ஏதாவதை ஒன்றை செயலாற்றும் வரை அதன் முடிவு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் (ஆபகூக் 1:2-4). இந்த தீர்க்கதரிசிக்கான தேவனின் பதிலானது பொறுமையும், போதனையும் நிறைந்த ஒன்றாகவே காணப்பட்டது. ஆபகூக்கின் கவலையான, பாவம் நிறைந்த யூதாவின் மீதான தேவனின் நியாயத்தீர்ப்பானது, தேவன் தனது மக்களோடு செய்த உடன்படிக்கையானது பாவத்தின் விளைவுகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிப்பதாக உறுதியளிக்கவில்லை என்பதை காட்டுகிறது. தேவன் தமது நீதியை பற்றி அலட்சியமாக இல்லை.
ஆனால், தான் யூதாவை தண்டிக்க பாபிலோனை பயன்படுத்துவேன் என்று எப்பொழுது ஆபகூக்கிற்கு தேவன் வெளிப்படுத்தினாரோ ஆபகூக் மீண்டும் குழப்பமடைந்தான். பாபிலோனை விட யூதா “அதிக நீதியுடையது” என்று ஆபகூக் கருதி (ஆபகூக் 1:13), ஒருவேளை நீதியுள்ளவனை தண்டிக்க அநீதியுள்ளவனை தேவன் அனுமதித்தால் இதுவும் தீமையாக எண்ணப்படுமே (1:13) என்று ஆபகூக் நினைத்தான்.
2. பாபிலோன் மீதான நியாயத்தீர்ப்பைப் பற்றி தேவன் அநீதியுளளவரல்ல.
இரண்டாம் அதிகாரத்தில் ஆபகூக்கின் குற்றச்சாட்டுக்கு தேவன் அளித்த நீண்ட பதில் பாபிலோனின் பாவத்தை, அவர்கள் யூதாவை தாக்குவதற்கு முன்பே கர்த்தர் முழுமையாக அவற்றை அறிந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது. பண்டைய மத்திய கிழக்கில் முடிந்தவரை பாபிலோன் ஓர் பெரிய ராஜ்யமாக ஆதிக்கம் செலுத்துவதற்கு அதனிடம் காணப்பட்ட பெருமை, வன்முறை மற்றும் சுய மகிமை ஆகியவற்றை தேவன் விரிவாக குறிப்பிடுகிறார். (ஆபகூக் 2:5) ல் குறிப்பாக இந்த பாபிலோன் ராஜ்ஜியம் தன்னை வளப்படுத்துவதற்காக மற்ற நாடுகளை தனது வன்முறையினால் கொள்ளையடித்ததற்காகவும் (2:6-13), மற்ற நாடுகளிடமிருந்து தான் விரும்பியதை பெறுவதற்கு தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தியதற்காகவும் (2:15-7) இந்நாடு கண்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதன் வெற்றிக்கான காரணங்களாக பொய்யான விக்கிரகங்களுக்கு மகிமை செலுத்துகிறது (2:18-19).
பாபிலோனின் இத்தகைய உலகளாவிய ஆதிக்க திட்டத்திற்கு எதிராக, இந்த ராஜ்யத்தின் மீது தேவனின் அளவில்லா தாங்கமுடியாத நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்று கர்த்தர் உரைக்கிறார். ஆனால் பாபிலோன் மீதான தேவனின் நியாயத்தீர்ப்பு அதன் பாவங்களுக்கு பழி வாங்குவதற்கும் அதிகமாக வேறொன்றையும் செய்கிறது, இது ஆபகூக்கின் இரண்டாவது கவலையை நிவிர்த்தி செய்யும். பூமி அனைத்தும் கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் படி உலகம் முழுவதும் தனது இரட்சிப்பின் ஆட்சியை நிறுவவதையே தேவன் இங்கு உறுதியளிக்கிறார் (ஆபகூக் 2:14). இது ஆபகூக்கிற்கான தேவனின் மூன்றாவது பதிலுக்கு நேராக அழைத்துச் செல்கிறது.
3. தேவனின் உள்ள விசுவாசம் சாமாதனத்தையும் வாழ்வையும் அளிக்கிறது.
ஆபகூக் 2:14 ல் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை தேவன் முன்னுரைப்பதற்கு முன்பாக, அதிகாரம் 3 ல் அவரது பூரண நீதியும் ஆச்சரியமான கிருபையும் பாவிகளை தண்டித்து, கிருபையினால் பாவங்களை நீக்கும் என்பதை ஆபகூக் 3:3-15 ல் தேவன் உரைக்கிறார். தேவனின் நீதி மற்றும் அவரது மீட்பின் வாக்குத்தத்தமானது மீண்டும் ஆபகூக்கை சீர்படுத்துகிறது (3:2). இந்த சீர்படுத்தலானது, பின்வருவற்றின் மீதான தேவனின் நீதியும், நியாயத்தீர்ப்பும் செலுத்துவதற்கு தேவனின் வருகையின் தெளிவான காட்சியின் மூலம் முழுமைப்படுத்தப்படும்.
பாவிகள் மீதான தேவனின் முழுமையான நியாயத்தீர்ப்பும் தமது மக்களின் மீதான அவரின் முழுமையான மீட்பும் இரண்டு முக்கிய செய்திகளை ஆபகூக்கிற்கும் இதன் வாசகர்களுக்கும் போதிக்கிறது. முதலாவதாக, இச்செய்திகள் ஆபகூக்கின் இருதயத்துக்குள் சென்று அங்கு மாற்றத்தை உண்டுபண்ணி அவனது வெளிப்புற தோற்றத்திலும் முழுமையான மாறுதலை உண்டாக்குகிறது. தேவனின் வார்த்தையினால் அவனது எரிச்சலும் சந்தேகமும் நீக்கப்பட்டு, தேவனின் வார்த்தையில் சொல்லப்பட்ட தேவன் பரிசுத்தமாகுதலையும் சிருஷ்டிகளின் பூரண நிலையையும் கொண்டுவருவார் என்ற விசுவாசம் அவனுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய மனது மற்றும் இருதயத்தின் நிலையில் ஆபகூக் தீர்க்கதரிசி, தேவன் சர்வ இறையாண்மையோடு நியமித்த காலத்தில் அவரது வாக்குத்தத்தஙகளை நிறைவேற்றுவார் என்று விசுவாசித்து பொறுமையோடு காத்திருக்க அவனால் முடியும்.
இரண்டாவது, வாழ்வைக்கொடுக்கும் அவரது கிருபையுள்ள வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கும் மக்களுக்கு தேவன் மீட்பின் நீதியை கொடுக்கிறார். அதிகாரம் 3 ல் சொல்லப்பட்ட சத்தியமானது தேவனின் மக்களை விடுவிக்கும் இரண்டாவது யாத்திராகமத்தின் விடுதலையாகி கருதுகிறது. வெறுமனே பாபிலொனின் பிடியிலிருந்து மாத்திரமல்ல அவர்களின் பாவத்தின் விளைவுகளான தேவ கோபாக்கினை மற்றும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை செய்வதை பற்றி பேசுகிறது. இது தேவனால் அனுப்பப்பட்டு அவரது மக்களுக்கு பதிலாக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து தேவனால் உயர்த்தப்பட வரக்கூடிய மேசியாவால் மாத்திரமே சாத்தியமாகும் (ஆபகூக் 3:13, அப் 17:3).
ஆபகூக்கின் செய்தியானது தீர்க்கதரிசியை மிகவும் உபத்திரவப்படுத்திய பாவத்தின் பிரச்சினைகளுக்கு தீர்க்கமான பதிலாகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் , அனைத்து துன்மார்க்கர் மீதும் தேவனின் வெற்றியையும் மேசியாவின் மூலம் இரட்சிப்பையும் உறுதியாக்குகிறது. இந்த சத்தியங்களின் வெளிச்சத்தில், நியாயத்தீர்ப்பை பிடித்துக்கொண்டிருக்கிற தேவனின் பொறுமையை கொண்டாடி, கர்த்தரின் வருகைக்குள்ளாக உலகத்தின் கடைசிபரியந்தமும் சுவிசேஷத்தை கொண்டு செல்ல உற்சாகப்படுவோமாக (2 பேதுரு 3:9).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.