15-05-2025

மீகா புத்தகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள  வேண்டிய பிரதான காரியங்கள்

ஆமோஸ் மற்றும் யோனா தீர்க்கதரிசிகளின் காலத்திற்கு பின்னர், ஒரு தலைமுறையை கடந்து, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா போன்ற ராஜாக்களின் ஆட்சி  காலத்தில், கிமு 8 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். இது குழப்பம் நிறைந்த, கலகமும் கொந்தளிப்பான காலகட்டமாயிருந்தது.