15-07-2025
யோவான் 6:48-ல், இயேசுவின் ஏழு "நானே" கூற்றுகளில் முதல் அறிக்கையை இங்கே சிந்திக்கலாம். இந்த கூற்றுகளில் ஆறு கூற்றுகள் ஒரு வேற்றுமையான பயன்பாட்டை(predicate nominative) கொண்டுள்ளன – அப்பம் (யோவான் 6:48), ஒளி (யோவான் 8:12; 9:5), வாசல் (யோவான் 10:7, 9), நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11, 14), உயிர்த்தெழுதலும் ஜீவனும் (யோவான் 11:25), மற்றும் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் (யோவான் 14:6) போன்றவைகளே – இவை இயேசுவின் ஆள்தன்மையையும், மீட்பின் செயலையும் பற்றி நமக்கு ஏதோ ஒன்றைத் தெரிவிக்கின்றன.